×

பூந்தமல்லி அருகே பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது: 13 மொபெட்கள் பறிமுதல்


பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே இருசக்கர வாகனங்கள் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், திருடப்பட்ட 13 மொபெட்களை பறிமுதல் செய்தனர். சென்னை மதுரவாயல், போரூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருடப்படுவதாக மதுரவாயல் போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து சம்பவம் நடந்த இடங்களில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பூபதிராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் (22), மாங்காட்டை சேர்ந்த நாத் (22), திருவேற்காட்டைச் சேர்ந்த தீபன் (20) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரே ரகமான 13 மொபெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post பூந்தமல்லி அருகே பைக் திருடிய 3 வாலிபர்கள் கைது: 13 மொபெட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,Maduravayal ,Borur ,Ayyappanthangal ,Chennai ,
× RELATED போரூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாய தாமரை...